ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கோவையில் தீபாவளி கொண்டாட்டம்

உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கோவை விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.



கோவையில் செயல்பட்டு விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, அதன் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் முதியோர் மற்றும் இளையோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது, உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி, அறங்காவலர் நிவேதா ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் சுலைமான் கலந்து கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பெண்கள் மட்டும் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருவதாகவும், இது போன்று தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...