கோவையில் கார் ஒர்க்‌ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்து - 13 கார்கள் எரிந்து நாசம்

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 கார்கள் எரிந்து நாசமாகின.

கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியான ஸ்ரீநகர் பகுதியில் சாய்பாபா காலனியை சேர்ந்த வர்கீஸ் என்பவர் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கண்டத் கார் ஒர்க் ஷாப் என்ற பெயரில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் இவர் அதன் கிளையாக கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல்பகுதியான ஸ்ரீ நகர் பமுதியிலும் கார் டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக அங்கு தொழில் செய்து வரும் இவரிடம் 6 பேர் பணியாற்றி வரும் நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அனைவரும் விடுமுறை எடுத்து ஊருக்கு சென்றுள்ளனர்.



இதனிடையே ஒர்க் ஷாப்பில் நின்றிருந்த கார்களில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த தீ விபத்தில் அங்கிருந்த 13 கார்கள் எரிந்த சூழலில் 10 கார்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்தது. இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கவுண்டம்பாளையம் காவல் நிலைய போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...