தேசிய குழந்தைகள் தினம் - கோவையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி கோவையில் நடைபெற்றது. இறுதியாக உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கோவை: தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியார் தொடங்கி வைத்தார்.

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை, மாநில குழந்தைகள் பாதுக்காப்பு சங்கம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் துவக்கி வைத்தார்.



இந்தப் பேரணியில், சமூக பாதுகாப்பு துறையினர் மற்றும் தேசிய குழந்தைகள் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ்யில் நிறைவடைகிறது. பேரணிக்கு முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.



மேலும் இந்நிகழ்வில் நிமிர்வு கலைக்குழுவினரின் பறை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...