போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாகவே சதாம் உசேன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் பரூக் கொலை வழக்கில் வக்கீல் பேட்டி


பாரூக் கொலை வழக்கில் அன்சார்த் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று சதாம் உசேன் என்ற ஒரு நபர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்தார்.

இந்த நிலையில், பாரூக் கொலையில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கூறவே நீதிமன்றத்தில் சதாம் உசேன் சரணடைந்துள்ளதாக அவரது வக்கீல் ஜக்கிரியா தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பாரூக் கொலை வழக்கில் 6 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிப்பதாக கூறினர். ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் போலீசாரிடம் இல்லை. இந்த கொலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதோடு தினமும் அவரது வீட்டிற்கு சென்று மனரீதியாக பாதிப்படைய செய்கின்றனர். 

இந்த கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதற்காகவே சதாம் உசேன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

மேலும், சிலர் இன்றோ அல்லது நாளையோ நீதிமன்றத்தில் சரணடைவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...