பாரூக் கொலை வழக்கில் அன்சார்த் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று சதாம் உசேன் என்ற ஒரு நபர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்தார்.
இந்த நிலையில், பாரூக் கொலையில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கூறவே நீதிமன்றத்தில் சதாம் உசேன் சரணடைந்துள்ளதாக அவரது வக்கீல் ஜக்கிரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாரூக் கொலை வழக்கில் 6 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிப்பதாக கூறினர். ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் போலீசாரிடம் இல்லை. இந்த கொலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதோடு தினமும் அவரது வீட்டிற்கு சென்று மனரீதியாக பாதிப்படைய செய்கின்றனர்.
இந்த கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதற்காகவே சதாம் உசேன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மேலும், சிலர் இன்றோ அல்லது நாளையோ நீதிமன்றத்தில் சரணடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.