உடுமலை அருகே ஊராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா - ஏராளமானோர் பங்கேற்பு

குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நமது இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளானது குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.



தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் தினமான இன்று குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கோவை பல் தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம், அதோடு மட்டுமல்லாமல் எதிர்கால இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய குழந்தைகள் என்பதை மாணவர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற குழந்தைகளாகிய நீங்கள் நன்றாக படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு சாதனையாளர்களாக நீங்கள் வரவேண்டும் என்று கூறி குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த மாதம் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...