உடுமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் - திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு

காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை மழைநீர் சூழ்ந்தது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதியில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது திடீரென பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. 



இதனால் திருமூர்த்தி மலை அடிவாரம் பகுதியில் உள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பூஜைகள் நிறுத்தப்பட்டன.



மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...