பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் கடுமையான குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி பாப்பம்பட்டி தி மு க ஒன்றிய துணை செயலாளர் பி.ஆர்.பரமசிவம், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

பாப்பம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என பில்லூர் குடிநீர் 1 லட்சத்து 65 லிட்டர் ஒதுக்கீடு செய்து உள்ளனர். அனால் கடந்த மூன்று வருடகாலமாக சுமார் 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.

இதனால் 17 நாட்களுக்கு ஒருமுறை 1/2 மணி நேரம் மட்டும் ஒரு குடும்பத்திற்கு பத்து குடம் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், மழை இல்லாத காரணத்தினால் எங்கள் பகுதியில் 7 போர்வெல்களில் கிடைத்து வந்த சப்பை தண்ணீரும் இப்பொது கிடைப்பது இல்லை.

இந்த கடுமையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதுமான பில்லூர் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...