பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் கடுமையான குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி பாப்பம்பட்டி தி மு க ஒன்றிய துணை செயலாளர் பி.ஆர்.பரமசிவம், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
பாப்பம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என பில்லூர் குடிநீர் 1 லட்சத்து 65 லிட்டர் ஒதுக்கீடு செய்து உள்ளனர். அனால் கடந்த மூன்று வருடகாலமாக சுமார் 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.
இதனால் 17 நாட்களுக்கு ஒருமுறை 1/2 மணி நேரம் மட்டும் ஒரு குடும்பத்திற்கு பத்து குடம் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், மழை இல்லாத காரணத்தினால் எங்கள் பகுதியில் 7 போர்வெல்களில் கிடைத்து வந்த சப்பை தண்ணீரும் இப்பொது கிடைப்பது இல்லை.
இந்த கடுமையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதுமான பில்லூர் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
பாப்பம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என பில்லூர் குடிநீர் 1 லட்சத்து 65 லிட்டர் ஒதுக்கீடு செய்து உள்ளனர். அனால் கடந்த மூன்று வருடகாலமாக சுமார் 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.
இதனால் 17 நாட்களுக்கு ஒருமுறை 1/2 மணி நேரம் மட்டும் ஒரு குடும்பத்திற்கு பத்து குடம் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், மழை இல்லாத காரணத்தினால் எங்கள் பகுதியில் 7 போர்வெல்களில் கிடைத்து வந்த சப்பை தண்ணீரும் இப்பொது கிடைப்பது இல்லை.
இந்த கடுமையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதுமான பில்லூர் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.