எம்.எஸ்.எஸ் நிறுவனம் சேவை குறைபாடு - இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு 2022ம் ஆண்டு, பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் அனுப்பிய டயரி மெஷினை டெலிவரி செய்யாமல் எம்.எஸ்.எஸ் நிறுவனம் திருப்பி அனுப்பியது கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.


கோவை: பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, ஆவாரம்பாளையம் ரோட்டில், ராஜசேகர் என்பவர் பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சேலம் ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு, 2022, செப். 1ல், 10,030 ரூபாய் மதிப்புள்ள, டயரி மெஷின் ஒன்றை, எம்.எஸ்.எஸ். என்ற பார்சல் சர்வீஸ் வாயிலாக, அனுப்பி வைத்தார். ஆனால், வாடிக்கையாளருக்கு டயரி மெஷின் டெலிவரி செய்யப்படாமல் திரும்பி வந்தது.

இது பற்றி கேட்ட போது, 'முகவரியில் ஆள் இல்லை' என்று கூறினர். ஆனால், குறிப்பிட்ட முகவரிக்கு, பார்சலை கொண்டு செல்லாமல், வேறு முகவரிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜசேகர் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'மனுதாரர் அனுப்பிய முகவரிக்கு, பார்சலை எடுத்து செல்லாமல், எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாருக்கு மொத்தம் 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...