மூலனூர் பகுதியில் கண்வலி கிழங்கு சாகுபடியில் நஷ்டம் - உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக வெறும் 25 கிலோ மட்டுமே கண் வலி கிழங்கு கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இங்கு விற்க முடியாது என கூறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் எதிர்பாராத விலை கிடைக்காததால் கண் வலி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக 25 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. கிலோ 3000 ரூபாய்க்கு விற்கும் எனக் கூறினர். ஆனால் தற்போது பதினைந்தாயிரம் கூட வாங்க ஆள் இல்லை.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இது அங்கீகரிக்கப்பட்ட பயிர் அல்ல. இங்கு விற்க முடியாது என கூறுகின்றனர்.

இதை சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை நிர்ணயமும், ஏற்றுமதி மற்றும் விற்பனை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...