கோவையில் மழை நீர் வடிகால் கட்டும் பணி - மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்

வெள்ளக்கிணறு, சக்தி கிரீன் லேன்டு, பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில் 3 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கவுண்டம்பாளையம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் திரும்ப கட்டுதல் பணியை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பிரதான சாலை முதல் சங்கனூர் பள்ளம் வரை மூலதன நிதி திட்டத்தின்கீழ் ரூ.169 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் திரும்ப கட்டுதல் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்கள்.



உடன் மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் ரூ.860.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளின் ஒருபகுதியாக வடக்கு மண்டலம் வார்டு எண்.14க்குட்பட்ட வெள்ளக்கிணறு, சக்தி கிரீன் லேன்டு, பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில் 3 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா தங்கவேல்,பழனிசாமி (எ) சிரவை சிவா, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தமிழ்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர் கீதாதேவி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் காளிமுத்து, மாநகராட்சி உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...