கோடாங்கிபாளையத்தில் கல்குவாரியில் டெட்டனேட்டர் வைத்து வேட்டு - வீடுகளில் விரிசல்

சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிக்கு வைத்த வேட்டால், நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதில் குவாரிக்குள் இருக்கும் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடாங்கி பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் விஜயலட்சுமி என்ற கல்குவாரியில் நேற்று மாலை வேட்டு வைத்ததாகவும் அதற்கு சட்டவிரோதமாக டெட்டநேட்டர்களை பயன்படுத்தியதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்த கல்குவாரி ஒரு மாத காலம் ரீஸ் காலம் முடிந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் இந்நிலையில் ஒரு ரூம் முழுக்க வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் அது வெடித்ததில் கல்குவாரிக்குள் இருக்கும் வீடுகள் இடிந்து தரைமட்டமாக உள்ளதாகவும் அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் விரிசல் விட்டும் வீட்டின் கண்ணாடிகள் இடிந்து விழுந்தும் மாபெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் குடியிருக்க முடியவில்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து தற்போது சம்பவம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து சிலிண்டர் வெடித்து விட்டதாக பொய்யான தகவலை கூறுவதாகவும் இதற்கு பல்வேறு அலுவலர்களும் துணை போவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் கால அவகாசம் முடிந்த நிலையிலும் பயன்படுத்தி வந்தது எப்படி இதுபோன்று மாபெரும் வெடி விபத்து ஏற்பட்டும் இன்னும் இதுவரை இந்த கம்பெனியை சீல் வைக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பல்வேறு கேள்விகளை இப்பகுதி விவசாயிகள் எழுப்புகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...