உடுமலை வருவாய் கோட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

மடத்தூர் பிரிவில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து டிவி, ஸ்டெபிலைசர், வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஜஸ்வந்த் கண்ணன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாச்சியராக ஜஸ்வந்த் கண்ணன் பணியாற்றி வருகிறார். இவருக்கு அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு பள்ளபாளையம் அருகே மடத்தூர் பிரிவில் அமைந்து உள்ளது. அதில் தங்கி இருந்து ஜஸ்வந்த் கண்ணன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி குடியிருப்பை பூட்டிவிட்டு சொந்த ஊரான பரமத்திவேலூருக்கு சென்று விட்டார்.

பின்னர் பணிக்கு திரும்பிய அவர் அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.



உள்ளே சென்று பார்த்த போது டிவி, ஸ்டெபிலைசர், வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட 1லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ஜஸ்வந்த் கண்ணன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்.டி.ஓ குடியிருப்பில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...