வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறை

வாழ்க்கையில்  மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என தனியார் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.



கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய “நம்மாலும் முடியும்” என்ற புத்தகம் விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது.

இதன் நிகழ்ச்சி கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளர் கல்லூரி தமிழ்துறை சார்பில் இன்று நடைபெற்றது.

இதில், கல்லூரி துணை முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகிக்க கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அருள்சீலி வரவேற்புரையாற்றினார். நூல் அறிமுக உரையை வள்ளியப்பன் பேசினார். இந்நிகழ்ச்சியில் விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசுகையில், இந்த புத்தகம் எழுத தூண்டுகோலாக ஜப்பான் நாட்டின் புஷிமா கலாச்சாரம் மற்றும் ஜப்பானிய மக்களின் தொழில்நுட்பம் மற்றும் வாழ்வாதார முறை தன்னை வெகுவாக கவர்ந்தது என கூறினார்.

ஜப்பானிய மக்கள் வாழ காரணம் இருந்தால் வாழலாம் அல்லது செத்துமடி என்ற கொள்கை உடையவர்கள் என தெரிவித்தவர். அந்நாட்டில் சமுதாய அக்கறையும் லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஆட்சி, கடின உழைப்பு ஆகிய காரணத்தாலேயே சிறந்த நாடாக விளங்குவதாக தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி திறமை உள்ளதாகவும், பயம் இருந்தாலும் செயலை செயல்படுத்துவது தான் தைரியம் என்றவர், வாழ்கையில் தடைகள் மற்றும் இடையூறுகளை தாண்டி மாணவர்கள் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சைலேந்திரபாபு, மாணவிகளுக்கு தான் எழுதிய “நம்மாலும் முடியும்” புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...