உடுமலையில் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் - ஏராளமானோர் பங்கேற்பு

மறைந்த முதுப்பெரும் தலைவர் சங்கரய்யா மறைவையொட்டி உடுமலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் விவசாய சங்க நிர்வாகிள் மாதர்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.


திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் மறைந்த தோழர் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் குரல்குட்டை, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, கண்ணமநாயக்கனூர், எரிசினம்பட்டி, செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், கொடிங்கியம், சாலையூர், பெரியவாளவாடி சர்க்கார்புதூர், பொன்னாலம்மன் சோலை உட்பட பல்வேறு பகுதிகளில் CPIM கிளைகளில் சங்கரய்யா நினைவைப்போற்றி புகழஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றது.



இதில் CPIM உடுமலைஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், கமிட்டிஉறுப்பினர்கள் S.ஜெகதீசன், M.ரங்கராஜ், சு.தமிழ்த்தென்றல் M.T.அருண்பிரகாஷ், கிளைச்செயலாளர்கள் தட்சினாமூர்த்தி, செந்தில்குமார், ஆண்டமுத்து, மாணிக்கவாசகம், மணிக்குமார், ஆறுச்சாமி, பிரபுராம், இளையபாரதி, சபரி, மாசானி, சுப்புலட்சுமி கல்பனா, பானுமதி சத்யா உட்பட வாலிபர்சங்க, தொழிற்சங்க, வி.தொ.சங்க, மாதர்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...