ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த தொழில்நுட்ப ஊழியர் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற அவசரஊர்தியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தும்பலப்பட்டி கிராமத்தை சேர்ந்த நிவேதாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. கணவர் சரவணகுமார் ஜல்லிபட்டியைசேர்ந்த 108 அவசர உதவி மூலம்மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் பிரசவ வலிஅதிகமானதால் தொழில்நுட்ப பணியாளர் பர்கானா பர்வீன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஓட்டுநர் தங்கராஜ் மற்றும் தொழில்நுட்ப பணியாளருக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தும்பலப்பட்டி கிராமத்தை சேர்ந்த நிவேதாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. கணவர் சரவணகுமார் ஜல்லிபட்டியைசேர்ந்த 108 அவசர உதவி மூலம்மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் பிரசவ வலிஅதிகமானதால் தொழில்நுட்ப பணியாளர் பர்கானா பர்வீன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஓட்டுநர் தங்கராஜ் மற்றும் தொழில்நுட்ப பணியாளருக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.