உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள பகுதிகளில் இயங்கி வரும் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கரையூர் மற்றும் ஆலம்பாளையம் பகுதிகளில் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மீண்டும் மில்லின் உதிரி பாகங்கள் ஆன இறக்கைகள் மற்றும் கோபுர தூண்கள் ட்ரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றை லாரிகள் மூலம் கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சாலை வழியில் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் காத்தாடியின் உதிரி பாகங்களை கனரக வாகனங்களில் தனியார் விண்டு மில் நிறுவனத்தினர் கொண்டு வந்தனர்.
அப்போது தாறுமாறாக கனரக வாகனங்கள் விண்டுமில் உதிரிபாகங்களை ஏற்றுக் கொண்டு வந்த போது கரையூர் காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின் கம்பங்களை உடைத்தும் பெயர்களை சேதப்படுத்தியது.
அதேபோல் கரையூர் கிராமம் முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருந்தது அதுமட்டுமின்றி கரையூர் மற்றும் ஆறாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கரையூர் மற்றும் ஆலம்பாளையம் பகுதிகளில் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மீண்டும் மில்லின் உதிரி பாகங்கள் ஆன இறக்கைகள் மற்றும் கோபுர தூண்கள் ட்ரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றை லாரிகள் மூலம் கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சாலை வழியில் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் காத்தாடியின் உதிரி பாகங்களை கனரக வாகனங்களில் தனியார் விண்டு மில் நிறுவனத்தினர் கொண்டு வந்தனர்.
அப்போது தாறுமாறாக கனரக வாகனங்கள் விண்டுமில் உதிரிபாகங்களை ஏற்றுக் கொண்டு வந்த போது கரையூர் காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின் கம்பங்களை உடைத்தும் பெயர்களை சேதப்படுத்தியது.
அதேபோல் கரையூர் கிராமம் முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருந்தது அதுமட்டுமின்றி கரையூர் மற்றும் ஆறாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.