தமிழக எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் - கோவை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள தமிழகம் - கேரளா - கர்நாடகா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.பி., பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக எல்லை பகுதியான வாளையார், பொள்ளாச்சி, ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு கூடலூர் வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டு பட்டு தப்பித்துச் சென்றனர். அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழையாதபடியும், வேறு மாவோயிஸ்டுகள் எல்லைப் பகுதிக்கு நுழைந்து விடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., மாநகர் மற்றும் மாவட்ட பிரிவுகள், நுண்ணறிவுபிரிவு, ஸ்பெஷல் பிராஞ்ச், க்யூ பிராஞ்ச், மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு, 14 செக்போஸ்ட்களில் 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு செக்போஸ்டில் செல்லக்கூடிய வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படும். அதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வரக்கூடிய பயணிகளை முழுமையாக சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக அவர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆட்சியர் அக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...