கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த திராவிடர் விடுதலை கழகத்தின் உறுப்பினர் மற்றும் இரும்பு வியாபாரி பாரூக் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஒருவர் அந்த கொலை தொடர்பாக சரணடைந்தார்.

இன்று பாரூக் கொலை வழக்கு தொடர்பாக போத்தனூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்ததைத்தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது போத்தனூரைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் கோவை குற்றவியல் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்துள்ளார்.
இதனிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் சிலர் நிதிமன்றம் அல்லது காவல்நிலையத்தில் சரணடைவார்கள் எனவும், அவர்கள் மீதான குற்றம் தொடர்பான உண்மை நிலை விசாரணைக்கு பின்பே தெரியவரும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.