வால்பாறை அருகே தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் - கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்த சோகம்

தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது. விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே 12 வயது சிறுவன் தொட்டில் கட்டிவிளையாடும் போது கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியில் சசி குமார், சூர்யா அவர்கள் மகன் ராஜா 12 வயது கருமலை எஸ்டேட் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற சிறுவன் வீட்டின் வாசலில் உள்ள சட்டத்தில் சேலையால் தொட்டில் கட்டி தனது தங்கை கிருத்திகா உடன் விளையாடிய போது எதிர்பாராத விதமாக கழுத்தில் சேலை சுத்தியுள்ளது.



மேற்படி சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் மேற்படி சிறுவன் இறந்துள்ளார் என்று தெரிவித்த நிலையில் சிறுவனின் பிரேதம் வால்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டால் விபரீதம் ஏற்பட்டு சிறுவன் பலியானது இப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...