பாப்பம்பட்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில் தற்பொழுது பல்லடம் முதல் கொச்சின் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவுப்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் தற்பொழுது இந்த மதுபான கடையை பாப்பம்பட்டி முதல் இடையர்பாளையம் சாலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த இடத்தின் அருகில் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை உள்ளதால் டாஸ்மாக் கடை அமைப்பதன் மூலம் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
மேலும், இப்பகுதி முக்கியசாலையில் உள்ள அபாய வளைவு பகுதியாகும். மேலும், இங்கு மதுபான கடை அமைத்தால் விபத்துகள் அதிகரிக்கும்.
எனவே கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இடையர்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில் தற்பொழுது பல்லடம் முதல் கொச்சின் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவுப்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் தற்பொழுது இந்த மதுபான கடையை பாப்பம்பட்டி முதல் இடையர்பாளையம் சாலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த இடத்தின் அருகில் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை உள்ளதால் டாஸ்மாக் கடை அமைப்பதன் மூலம் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
மேலும், இப்பகுதி முக்கியசாலையில் உள்ள அபாய வளைவு பகுதியாகும். மேலும், இங்கு மதுபான கடை அமைத்தால் விபத்துகள் அதிகரிக்கும்.
எனவே கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இடையர்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.