பாப்பம்பட்டியில் இருந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையினை இடையர்பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில் தற்பொழுது பல்லடம் முதல் கொச்சின் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நீதிமன்ற உத்தரவுப்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் தற்பொழுது இந்த மதுபான கடையை பாப்பம்பட்டி முதல் இடையர்பாளையம் சாலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தின் அருகில் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை உள்ளதால் டாஸ்மாக் கடை அமைப்பதன் மூலம் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும். 

மேலும், இப்பகுதி முக்கியசாலையில் உள்ள அபாய வளைவு பகுதியாகும். மேலும், இங்கு மதுபான கடை அமைத்தால் விபத்துகள் அதிகரிக்கும்.

எனவே கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இடையர்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...