உடுமலையில் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகளை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தளிரோடு வழியாக திருமூர்த்தி மலை, அமராவதி, மூணார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாக பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் குறுக்காக ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் சமயத்தில் கேட் அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சதுக்கம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளின் இரவு நேர பயணத்திற்கு ஏதுவாக பாலத்தின் இரண்டு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் கட்டப்பட்ட பின்பு போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்தை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் விளக்குகள் எரியாமல் ஒரு பகுதி இருள் சூழ்ந்து விடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு வாகன ஓட்டிகள் விரைவான பயணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

அத்துடன் பாலத்தின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் பாதை முடிவடைந்து தார் சாலை தொடங்கும் பகுதியில் ஆங்காங்கே துளை விழுந்துள்ளது. அதை சீரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலத்தில் பழுதடைந்த விளக்குகளை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் பாலத்தில் ஏற்பட்டுள்ள துளைகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...