செட்டிப்பாளையமத்தில் தேசிய சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - சீறி பாய்ந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் FMSCI எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 26-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் இறுதி போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில்நடைபெற்றது.



ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான இறுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இதில் எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது.



இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...