விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் - பறிமுதல் செய்த பொள்ளாச்சி அதிகாரிகள்

இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விற்பனைக்காக லாரியல் கொண்டு வரப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருட்களை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி பகுதியில், விற்பனைக்காக லாரியில் கொண்டு வரப்பட்ட, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி - கோவை ரோட்டில் நகராட்சி சுகாதார அலுவலர் சேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சி.டி.சி., மேட்டில் கோவையில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சி பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அதில், பொள்ளாச்சி பகுதியில் வினியோகம் செய்வதற்காக கோவையில் இருந்து, பிளாஸ்டிக் பேக், டம்ளர்கள், ஸ்பூன்கள், நான் ஓவன் பேக்ஸ், ஸ்ட்ரா போன்றவை கொண்டு வரப்பட்டன.

மொத்தம், 35 பண்டல்களில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் இல்லாத பொள்ளாச்சி நகராட்சியாக மாற்ற, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...