உப்பிலிபாளையத்தில் இன்ஜினியரிடம் பணம் மோசடி- போலீசார் விசாரணை

பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி மொபைனல் போனில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக கீர்த்தி குமார் என்பவர் அனுப்பி வைத்து ஏமார்ந்துள்ளார். இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார்.


கோவை: கோவை, உப்பிலிபாளையம் காந்தி புதுாரை சேர்ந்தவர் கீர்த்திகுமார், 35; சாப்ட்வேர் இன்ஜினியர்.சில மாதங்களுக்கு முன், இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு மெசேஜ் வந்தது.

அதிலுள்ள மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது பேசிய நபர், 'பகுதி நேர வேலையாக, ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால், பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம்' என, கூறினார்.

அதை நம்பிய கீர்த்தி குமார், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன் பின், அந்த நபரை, கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...