உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது - அமைச்சர் பாராட்டு

மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்கு நூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்கு  விருதை அறிவித்தது.


திருப்பூர் ;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது மற்றும் கேடயம் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம் இளம் வயது மாணவர்களிடம் வாசிப்பை நேசிக்க வைத்து பல்வேறு செயல்பாடுகளோடு பல்வேறு விழிப்புணர்வை சிறார்களிடம் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்குநூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்குவிருதை அறிவித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் நூலக தந்தை பிறந்த ஊரான சீர்காழி யில் நடந்த விருது வழங்கும் விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் விருதையும் கேடயத்தையும் வாசகர் வட்டத்திற்கு வழங்கினார்.

நூலக ஆர்வலர் விருது மற்றும் கேடயத்தை வாசகர் வட்ட தலைவர் க. சுப்பிரமணியன். மற்றும் வாசகர் வட்ட செயலாளர் நூலகர் ஆர். இலட்சுமணசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...