நீலகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் சில பகுதிகளில் சிறிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று உதகை- கோத்தகிரி சாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் சேகர், சிவகுமார் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட மேலும் சில தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மரம் மிகப்பெரியளவில் இருந்ததால் முதலில் அதன் கிளைகளை அகற்றிய அதிகாரிகள் தொடர்ந்து, மரத்தின் பெரிய பாகத்தை அகற்றி சாலை போக்குவரத்தினை சீர்செய்தனர்.

இந்நிலையில் இன்று உதகை- கோத்தகிரி சாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் சேகர், சிவகுமார் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட மேலும் சில தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மரம் மிகப்பெரியளவில் இருந்ததால் முதலில் அதன் கிளைகளை அகற்றிய அதிகாரிகள் தொடர்ந்து, மரத்தின் பெரிய பாகத்தை அகற்றி சாலை போக்குவரத்தினை சீர்செய்தனர்.