20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 7-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கோவை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்த 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு அணைகளாக வெளியிடக்கோரி கடந்த 2017 மார்ச் 14ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 



இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டம் நாளையும் (மார்ச் 21) தொடர்ந்து நடைபெறும் எனவும், மேலும், வரும் மார்ச் 22ம் தேதியன்று மாநிலம் முழுவதும் உள்ள 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இணைந்து சென்னை, பனகல் மாளிகை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநகரத்தை நோக்கி 20 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசு ஆணைகளாக வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு செய்யவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...