வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழிற் முனைவோருக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சியில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியை போடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மகளிர் திட்டம் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மகளிர் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தாராபுரம் இயக்குனர் குணசீலி வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிற்சியானது 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வாக தொழில் முனைவோரின் திறன்கள், சந்தை ஆராய்ச்சி, ஒரு நிறுவனத்தின் சாத்தியம் உள்ளிட்ட பயிற்சி நடைபெற்றது. 2-வது நிகழ்வாக 23-ம் தேதி வியாழக்கிழமை வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி நடைபெற உள்ளது.
3-வது நிகழ்வாக 25-ம் தேதி சனிக்கிழமை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம், பணி மூலதன மேலாண்மை, பணப்புழக்கம், வணிக கணக்குகளை வைத்திருத்தல் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் ஐஸ்வர்யா நன்றி உரை கூறினார்.
உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சியில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியை போடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மகளிர் திட்டம் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மகளிர் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தாராபுரம் இயக்குனர் குணசீலி வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிற்சியானது 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வாக தொழில் முனைவோரின் திறன்கள், சந்தை ஆராய்ச்சி, ஒரு நிறுவனத்தின் சாத்தியம் உள்ளிட்ட பயிற்சி நடைபெற்றது. 2-வது நிகழ்வாக 23-ம் தேதி வியாழக்கிழமை வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி நடைபெற உள்ளது.
3-வது நிகழ்வாக 25-ம் தேதி சனிக்கிழமை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம், பணி மூலதன மேலாண்மை, பணப்புழக்கம், வணிக கணக்குகளை வைத்திருத்தல் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் ஐஸ்வர்யா நன்றி உரை கூறினார்.