பொள்ளாச்சி அருகே பரமக்குடியிலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்த பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வளைவில் திரும்ப முயன்றபோது பஸ் மோதியதில், டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் பகுதியில் வளைவில் திரும்ப முயன்ற டிராக்டர் மீது 54 பயணிகளுடன் பரமக்குடியில் இருந்து மேல்மருவத்தூர் சென்றுவிட்டு கோவை வழியாக பொள்ளாச்சி மாசாணியம்மன்கோவில் மற்றும் பழனிக்கு வந்த சுற்றுலாப் பேருந்தானது கோயமுத்தூர் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் .

பேருந்தில் பயணித்த 8 பேருக்கு சிறு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டது. விபத்து காரணமாக பொள்ளாச்சி கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குபதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...