அப்பநாயக்கன்பாளையத்தில் மதுபானக்கடை அமைப்பதை தடுக்கக் கோரி சிபிஐஎம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

துடியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையினை இடமாற்றம் செய்து அப்பநாயக்கன்பாளையத்தில் அக்கடையினை அமைப்பதை தடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அம்மனுவில் சிபிஐஎம் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா கூறியுள்ளதாவது:-

துடியலூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மதுபான கடை இடமாற்றம் செய்து கோவை மாநகராட்சி 4-வது டிவிசனுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் ஊர் பகுதியில் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இப்பகுதியில் ராம் லட்சுமி அப்பார்ட்பெண்ட், காளியமமாள் காலனி, கேப்டவுன், ஜல்லிக்காடு, பார்க்சிட்டி, அண்ணா நகர், எஸ்எம்டி நகர், கலைஞர் நகர், மெக்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதி மக்கள் தற்போது மதுபானக் கடை அமையவுள்ள சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும், அச்சாலையினை அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திவருவதால் மதுபானக் கடை செயல்படும் பட்சத்தில் சமூகவிரோத செயல்களால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 

எனவே, இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையிலான பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...