துடியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையினை இடமாற்றம் செய்து அப்பநாயக்கன்பாளையத்தில் அக்கடையினை அமைப்பதை தடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் சிபிஐஎம் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா கூறியுள்ளதாவது:-
துடியலூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மதுபான கடை இடமாற்றம் செய்து கோவை மாநகராட்சி 4-வது டிவிசனுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் ஊர் பகுதியில் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இப்பகுதியில் ராம் லட்சுமி அப்பார்ட்பெண்ட், காளியமமாள் காலனி, கேப்டவுன், ஜல்லிக்காடு, பார்க்சிட்டி, அண்ணா நகர், எஸ்எம்டி நகர், கலைஞர் நகர், மெக்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதி மக்கள் தற்போது மதுபானக் கடை அமையவுள்ள சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், அச்சாலையினை அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திவருவதால் மதுபானக் கடை செயல்படும் பட்சத்தில் சமூகவிரோத செயல்களால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
எனவே, இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையிலான பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மனுவில் சிபிஐஎம் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா கூறியுள்ளதாவது:-
துடியலூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மதுபான கடை இடமாற்றம் செய்து கோவை மாநகராட்சி 4-வது டிவிசனுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் ஊர் பகுதியில் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இப்பகுதியில் ராம் லட்சுமி அப்பார்ட்பெண்ட், காளியமமாள் காலனி, கேப்டவுன், ஜல்லிக்காடு, பார்க்சிட்டி, அண்ணா நகர், எஸ்எம்டி நகர், கலைஞர் நகர், மெக்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதி மக்கள் தற்போது மதுபானக் கடை அமையவுள்ள சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், அச்சாலையினை அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திவருவதால் மதுபானக் கடை செயல்படும் பட்சத்தில் சமூகவிரோத செயல்களால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
எனவே, இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4-வது டிவிசன் செயலாளர் ந.ராஜா தலைமையிலான பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.