தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார். புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 28, ஆவாரம்பாளையம் சாலையில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்(TURIP 2023-2024) ரூ 27. 97 லட்சம் மதிப்பீட்டில் 640 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை , நேற்று நள்ளிரவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தீடீர் ஆய்வு செய்தார்.

அப்போது தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார். புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.

அப்போது, மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, மாநகராட்சி பொறியாளர் முருகேசன், உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி பொறியாளர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
அப்போது தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார். புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.
அப்போது, மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, மாநகராட்சி பொறியாளர் முருகேசன், உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி பொறியாளர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.