இருட்டறையில் அடைத்து மாணவன் சித்தரவதை- பிரபல நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கைது


நேரு கல்வி குழும கல்லூரி வாளாகத்தில் இருட்டறையில் அடைத்து வைத்து எட்டு நாட்கள் மாணவனை சித்தரவதை செய்ததாக நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் பிரபல நேரு கல்விக்குழுமம் இயங்கி வருகிறது. ஏரோநாட்டிக்கல், டெக்னாலஜி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு  பிரிவுகளில் இக்குழுமத்தின் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

இதேபோல கேரள மாநிலத்திலும் இந்த குழுமத்தின் சார்பில் கல்லூரிகள் இயங்கிவருகிறது. இந்த கல்விக்குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்த கல்விக் குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் பாம்பாட்டி என்கிற பகுதியில் நேரு அகாடமி சட்டக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் விஷ்ணுபினராய் என்கிற மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே கல்லூரியில் பயின்று வந்த திருச்சூர் எருமப்பட்டியை சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவனை கல்லூரி வளாகத்தில் உள்ள இருட்டறையில் எட்டு நாட்களுக்கு மேலாக அடைத்துவைத்து சித்தரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்லூரி சட்ட ஆலோசகர் சுசித்திரா, வல்சன்குமார் மற்றும் பேராசிரியர் சுகுமார் ஆகியோரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கோவையில் பிரபலமாக செயல்பட்டு வரும நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...