ஒரே இடத்தில் 300 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய மங்கை வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடிம், நடனம் ஆடியும் அசத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மங்கை வள்ளி கும்மி கலை குழுவினர் சார்பில் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி ருத்ராவதி பேருந்து நிலைய அருகே உள்ள மைதானத்தில் மங்கை வள்ளி கும்மி 110,வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒரே இடத்தில் 300 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய மங்கை வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர்.

இதைக் காண தாராபுரம், குண்டடம், சூரியநல்லூர் மேட்டுக்கடை தாயம்பாளையம், சங்கரன்டாபாளையம், வரப்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.
நிகழ்ச்சிக்கு உலக சாதனை படைத்த ஆசிரியர் வெள்ளநத்தம் பி.சண்முகசுந்தரம் ஆசிரியர் தலைமை வகித்தார். மங்கை வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கையில் கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது.
கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர்.
நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.
அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் , திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இதில் ஒரே இடத்தில் 300 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய மங்கை வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர்.
இதைக் காண தாராபுரம், குண்டடம், சூரியநல்லூர் மேட்டுக்கடை தாயம்பாளையம், சங்கரன்டாபாளையம், வரப்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.
நிகழ்ச்சிக்கு உலக சாதனை படைத்த ஆசிரியர் வெள்ளநத்தம் பி.சண்முகசுந்தரம் ஆசிரியர் தலைமை வகித்தார். மங்கை வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கையில் கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது.
கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர்.
நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.
அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் , திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.