தாராபுரம் அருகே டிராக்டர் மோதி தையல் தொழிலாளி பலி - உறவினர்கள் போராட்டம்

டிராக்டர் ஏற்றிய பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என முருகனின் மனைவி, அவர்களது உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கரையூர் பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் முருகன் (50). இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள கரையூர் பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.



முருகன் மீது டிராக்டர் ஏற்றிய பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என முருகனின் மனைவி அவர்களது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஆரணை நடத்தினர். சம்பவம் குறித்து முருகனின் மனைவி தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கொளத்துப்பாளையம் பேரூராட்சி கரையூர் பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.

தையல் தொழிலாளி முருகனின் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...