கோவை மாவட்டம், ஒண்டிபுதூர் அடுத்துள்ள பட்டணம் புதூர் சுரபி கார்டன் பேஸ் 2 பகுதியில் வசித்து வருபவர் சீத்தாபதி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் சேலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க கம்மல், செயின், நெக்லெஸ் உள்ளிட்ட 18 பவுன் தங்க நகைகள் திருடு போயுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சீத்தாபதி இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.