உடுமலை அருகே மதுபான கடை அமைக்க எதிர்ப்பு - குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

புதிய மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பொள்ளாச்சி சாலையில் தனியார் இடத்தில் அதிநவீன குளிர்சாதன மதுபான கூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெதம்பட்டியில் நால்ரோடு பகுதி சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது.



மேலும் இப்பகுதியில் பள்ளிகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள், பொள்ளாச்சி தாராபுரம் தேசிய நெடுச்சாலை அமைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அரசு மதுக்கடைகளால் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.



தற்பொழுது மீண்டும் கூடுதலாக அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் மனு வழங்கினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகும். இப்பகுதியில் அரசு மதுபான கடை இருந்தால் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...