ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட காளப்பட்டியில் மாநகராட்சி மற்றும் வேல்முருகன் என்டர்பிரைசஸ் ஆகியோர் இணைந்து ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி , மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தனர்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி ஆணையர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.


உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி ஆணையர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.