பீளமேடு பகுதியில் சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது. இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள காந்தி மாநகர் ஹட்கோ காலணியில் சரியாக மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளத்தில் சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி ஒன்று இன்று சிக்கிக்கொண்டது.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் கோவையில் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது. காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது.

இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...