வால்பாறை அட்டகட்டி பகுதியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

முகாமில் தொகுப்பு வீடு, கழிப்பறை, கல்வி கடன், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகள் உதவித்தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்காக பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருக்கிறது. ஒன்னாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு உட்பட்ட கவர்கள், சக்தி, தலனார், ஊமையாண்டி முடக்கு, வாட்டர்பால்ஸ் ஆகிய எஸ்டேட் பகுதிகள் மற்றும் பழங்குடி கிராமம் பூனாட்சி, கீழ் பூனாட்சி, வெள்ளிமுடி, அப்பராளியார் போன்ற ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படும் வகையில் அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.



காலை 10 மணிக்கு துவங்கிய முகாம் 3 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் நகராட்சி பணியாளர்கள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வனத்துறை, ஆகிய அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர்.



முகாமில் தொகுப்பு வீடு வேண்டும், கழிப்பறை வேண்டும், கல்வி கடன் வேண்டும், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்து குழந்தைகள் உதவித்தொகை,மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது இதில் 213 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வளிக்கப்படும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட துணை ஆட்சியர் நிரைமதி, வால்பாறை வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி ஆணையாளர் பெர்பெட்டி டெரன்ஸ் லியோ, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், திமுக நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...