அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 41க்குட்பட்ட பாப்பநாயக்கன்புதூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் இன்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் சாந்தி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதில் மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் சாந்தி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.