பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முற்றுகை - நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்பு

பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனைக்கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள திருவள்ளுவர் திடலில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து எந்த ஒரு அரசு அதிகாரிகளும் வரவில்லை எனக்கூறி இதனை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன்பாக முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் திரண்டு திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து நகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி நகராட்சியில் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, குப்பை சரிவர அள்ளுவதில்லை, தெரு விளக்குகள் எரிவதில்லை, நகராட்சி அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் பெறுகின்றனர் என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...