உடுமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும், பி.ஏ.பி பகிர்மான கால்வாய்கள் கடை மடை வரை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மேற்கு மாவட்டம் உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.



நிகழ்வில் மாநில உழவர் பேரியக்கம் துணைச் செயலாளர் பொன்ரமேஷ் கலந்துகொண்டு சிறப்பு ஊரை ஆற்றினார். உடுமலை மடத்துக்குளம் பகுதியில் மும்முனை மின்சாரம் இல்லாததால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து வருவதால் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் மற்றும் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும், பி.ஏ.பி பகிர்மான கால்வாய்கள் கடை மடை வரை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும், தனியார் உரக்கடைகளில் வாங்கபடும் விதைகள் முளைப்புத் திறன் இல்லாமல் இருப்பதால் விதை சான்று அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட உழவர் பேரியக்கம் தலைவர் திருமுருகன், ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், பாமக நிர்வாகிகள் சரவணன், சவுந்தர்ராஜ், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...