கோவையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அறை திறப்பு விழா

நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர் D 6, கரும்பு கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும்பு கடை சாரமேடு பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கண்காணிப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



மேலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அவர் கூறுகையில். காவல்துறையினருக்கு ஒரு சிறந்த நல்வழிகாட்டியாக இருப்பது சிசிடிவி காட்சிகள். நடந்ததை நான்கு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவதை விட, நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக இந்த சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என்றார்.

தொடர்ந்து இன்று 12 கேமரா பொருத்த பட்டு அதனை கண்காணிப்பு செய்யும் அறையை திறந்து வைப்பது, குற்றங்களை முழுமையாக தடுப்பதாக நான் கருதுகிறேன் என்றார். மேலும், செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்டவைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இது மாதிரியான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு முக்கிய நண்பனாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கரும்புகடை பகுதியின் கவுன்சிலர் அஹ்மத் கபீர், கரும்புகடை பகுதி காவல் ஆய்வாளர் தங்கம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும், தெற்கு உதவி ஆணையர் வீரபாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...