தாராபுரம் மக்காச்சோள விதை பண்ணையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி, நிலக்கடலை கதிரிலெப்பாச்சி, வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, விதை பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதை விதைச்சான்று அலுவலர்கள் பயிற்சி பருவம் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை பருவங்களில் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட கலவன்கள் எதுவும் இல்லை என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

புறந்தூய்மை முளைப்புத்திறன் ஈரப்பதம் மற்றும் பிற இன கலப்பு ஆய்வு செய்யப்பட்டு தரமானது என ஆய்வறிக்கை பெறப்படுகிறது. ஆய்வு அறிக்கை பெற்ற பின் சான் டிரட்டைகள் பொருத்தி தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தாராபுரம் வட்டாரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி நிலக்கடலை கதிரிலெப்பாச்சி வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு வேளாண்மை பொது மேலாளர் டான்சிடா விதை உற்பத்தியாளர்களாக விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது விதை சான்று அலுவலர் மனோஜ் குமார் உதவி அலுவலர் தேசிங்கு ராஜன் ஆகியோர் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...