கேசிடி கல்லூரி நிறுவனரின் 94-வது பிறந்தநாள் விழாவில் மகாலிங்கம் செஸ் அகாடமியை துவக்கிவைத்த கிரான்ட் மாஸ்டர் விஷ்வநாதன் ஆனந்த்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் அருட்செல்வர் என்.மகாலிங்கம் 94-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இருநாட்கள் அக்கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போது என்.மகாலிங்களம் அவர்களின் அவரது பார்வையிலான அதிகாரம், சமூக உணர்வுள்ள மனித நேய உணர்வு உள்ளிட்டவை குறித்து பகிரப்பட்டது.



மார்ச் 20 முதல் நாள் நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி ஊக்கத்தொகை மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மார்ச் 21, செவ்வாயன்று குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் நாளை முன்னிட்டு இணைத் தலைவர் ஸ்ரீ ஷங்கர் வானவராயர் வரவேற்புறை ஆற்றினார்.



பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்புரை ஆற்றினார். ஸ்ரீ மானுவல் ஆரோன் அவர்களை உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.சுந்தர் பொன்னாடை போற்றி வரவேற்றார். துணை தலைவர் எம்.மாணிக்கம், நிருபர் ஸ்ரீ. எம்.பாலசுப்ரமணியம் மற்றும் அக்கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.



நா.மஹாலிங்கம் சாதனையாளர் விருது இவ்வருடம் மானுவேல் ஆரோனுக்கு செஸ் விளையாட்டை இந்தியாவில் வளர்ச்சி பெற அரும்பாடு பட்டமைக்கு வழங்கப்பட்டது. ஆரோன் நா.மஹாலிங்கம் அவர்களுடன் இருந்த நட்பை பற்றியும், பின் அவர் செஸ் மீது கொண்ட ஈடுபாடும், அக்கறையும் பற்றி அவரது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நா.மஹாலிங்கம் செஸ் அகாடமி பள்ளி மாணவர்கள், செஸ் வீரர்கள் மற்றும் செஸ் ஆர்வலர்களுக்கு, செஸ் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் என ஊக்குவிக்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. 

செஸ் ஆர்வலரான அருட்செல்வரின் நினைவாக இந்த அகாடமி துவங்கப்பட்டுள்ளது. நா.மஹாலிங்கம் செஸ் அகாடமியை முன்னால் உலக சாம்பியனான ஜி.எம்.விஸ்வநாதன் ஆனந்த் திறந்து வைத்தார்



இதனைத்தொடர்ந்து, விஸ்வநாதன் ஆனந்த பேசுகையில், அருட்ச்செல்வரால் தான் தமிழ்நாடு செஸ் அகாடமி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் கொங்கு மண்டலத்தில் இந்த அகாடமி தலை சிறந்த அகாடெமியாக உருவெடுக்கும் மற்றும் இந்த அகாடெமியிலிருந்து பல சாம்பியன்கள் உதயமாவார்கள் என்று புகழுரைத்தார்.

மேலும், இந்நிகழ்சியில் ஜோதி நிலையம் மற்றும் விருத்தினர் மாளிகை திறப்பு விழா, தேவாரப் பண்ணிசைப் போட்டி, லய சமர்ப்பணம் போன்ற கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...