தெலுங்குபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் வாக்கத்தான்

வாக்கத்தான் நிகழ்ச்சியை காவல் உதவி ஆய்வாளர் பரமன் மற்றும் துணை முதன்மை போக்குவரத்து காப்பாளர் ரங்கபிரபு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்பினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே இந்த ஆண்டு முதல் மாதத்தில் இருந்து அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த உறுதி மொழி ஏற்று வாக்கத்தான் விழிப்புணர்வை இன்று ஏற்படுத்தினர்.



இந்த வாக்க்கதான் நிகழ்ச்சியை காவல் உதவி ஆய்வாளர் பரமன் மற்றும் துணை முதன்மை போக்குவரத்து காப்பாளர் ரங்கபிரபு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



வாக்கத்தான் நிகழ்ச்சியில் கட்டாயம் ஹெல்மெட் அணிவது, விபத்து எதிர்பாராத அழிவு, பாதுகாப்பு என்பது வருமுன் காக்கும் செயல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். தொடர்ந்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பாடல்களுக்கு நடனமாடியும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...