முன்னரே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் பெண்களை தாக்கும் வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் முதன்மையானதாகும். புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்று மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் லதா பாலசுப்ரமணியம் கூறினார்.
கோவை: கோவை விழாவின் 16 ஆம் ஆண்டு பதிப்பின் ஒரு பகுதியாக, கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில், பெண்களுக்கான இலவச வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகள் வழங்கப்பட்டன. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ரூபாய் 2500 மதிப்பிலான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாம், மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் லதா பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னரே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் பெண்களை தாக்கும் வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் முதன்மையானதாகும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண்கள் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும், மேலும் அணைத்து வயதினர் பெண்களும் ஹெச். பி. வி. வைரஸ்க்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். புற்றுநோய் இல்லா கோவையை உருவாக்குவதே ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலையாய நோக்கமாகும்.

இதன் ஒரு முயற்சியாக, வாரந்தோறும், அனைத்து வியாழக் கிழமையிலும், பெண்களுக்கான இலவச வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.
ரூபாய் 2500 மதிப்பிலான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இம்முகாம், மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் லதா பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னரே கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் பெண்களை தாக்கும் வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் முதன்மையானதாகும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண்கள் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும், மேலும் அணைத்து வயதினர் பெண்களும் ஹெச். பி. வி. வைரஸ்க்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். புற்றுநோய் இல்லா கோவையை உருவாக்குவதே ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலையாய நோக்கமாகும்.
இதன் ஒரு முயற்சியாக, வாரந்தோறும், அனைத்து வியாழக் கிழமையிலும், பெண்களுக்கான இலவச வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.