துலுக்கனூர் பகுதியில் சாலை போட்டதில் ஒப்பந்ததாரர் முறைகேடு - மக்கள் சாலை மறியல்

மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட துலுக்கனூர் 13-வது வார்டில் சிமெண்ட் சாலை அமைத்ததில் விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதிக்கு 40-மீட்டர் அளவு போடாமல் விட்டு, துலுக்கனூரில் உள்ள கோவில் பகுதிக்கு வரவேண்டிய சாலையை கிழபுறம் உள்ள தனி நபர் பட்டா இடத்திற்கு 4.0 மீட்டர் சாலை போட்டு தனியார் நில உரிமையாளரிடம் பணம் பெற்று ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக பஞ்சாயத்து பணத்தை செலவு செய்து சாலை அமைத்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் 100-குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது பண்டில் பணமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.



விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதியிலிருந்து உள்ள 40 மீட்டர் கோவிலுக்கு பொதுமக்கள் சாமி கும்பிட்டுச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.



எனவே துலுக்கனூர் நடு வீதியிலிருந்து கோவிலுக்கு கிழக்கே செல்லும் மெயின் பாதையில் 40 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைத்து கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வழிபாடு செய்யவும், பொதுமக்கள் அவசர தேவைக்கும் தினசரி தேவைக்கும் பயன்பட்டு வரும் மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் துலுக்கனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...