பல்லடம் அருகே கேத்தனூரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்

பல்லடம் அருகே கேத்தனூரில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையம் பிரிவில் எல்.எம் பள்ளி நடத்திய இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



கேத்தனூரில் தொடங்கி குள்ளம்பாளையம் வரை 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



பள்ளியின் தாளாளர் பாப்பாள், முதல்வர் சபீனா பர்வீன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு மற்றும் காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ரவி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

போட்டிக்குப் பிறகு, காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் செல்போன் மோகம் குறைக்குமாறும், அனைத்து வீடுகளிலும் சிசிடிவி பொருத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...