பூமியை சுத்தமாக வைக்கக் கோரி கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: நிலத்தில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை குப்பைகளாக போடுவதால் நிலம் மாசடைந்து ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதனால் பூமியை பாதுகாக்கவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் முன்வந்து பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி சார்பில் பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.



மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதில் சில மாணவர்கள் முகத்தில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...